அதில், “தேசிய அளவில் கலந்தாய்வு அட்டவணை வெளியிட வேண்டும். தேசிய மற்றும் மாநில சுற்றுகள் குறித்து நவீன தொழில்நுட்ப உதவியுடன் கலந்தாய்வு அட்டவணை தயாரித்து வெளியிட வேண்டும். தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கலந்தாய்வு கட்டணம், கல்வி கட்டணம் மாணவர் விடுதி கட்டணம், வைப்புத்தொகை உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும். தேசிய அளவில் ஒருமைப்படுத்தப்பட்ட கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பை தேசிய மருத்துவ ஆணையம் நிறுவ வேண்டும். இரண்டாவது சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு அடுத்த கலந்தாய்வை தொடங்காமல் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட வேண்டும். தவறிழைக்கும் கல்லூரிகளுக்கு கடுமையாக தண்டனை விதிக்கும் வகையில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கப்பட வேண்டும். இதைமீறி தொடர்ந்து தவறு செய்யும் கல்லூரிகளை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். பல இருக்கைகள் நிறுத்தி வைப்பது மற்றும் தவறான பிரதிநிதித்துவத்தை தடுக்க ஆதார் அடிப்படையிலான இருக்கை கண்காணிப்பை செயல்படுத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஒரேமாதிரியான கலந்தாய்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும். கலைந்தாய்வை மேற்பார்வை விட மூன்றாம் தரப்பு தணிக்கை முறையை ஏற்படுத்த வேண்டும்” என பல்வேறு அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
The post முதுநிலை நீட் முறைகேடு விவகாரம் வழிகாட்டு நெறிமுறைகளை வௌியிட்டது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.