தனியாக வசித்த டிரைவர் சாவு

சேலம், மே 23: சேலம் கருப்பூர் கோட்டகவுண்டம்பட்டி 3வது வார்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணனை மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ராமகிருஷ்ணன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் வீட்டின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு படுக்கையில் ராமகிருஷ்ணன் இறந்த நிலையில் கிடந்தார். இதுபற்றி கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரித்தனர். ராமகிருஷ்ணன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post தனியாக வசித்த டிரைவர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: