மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

 

ஓமலூர், மே 30:சேலம் பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மையம், தர்மபுரி ஆகியவற்றில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக, பெரியார் பல்கலைக்கழக இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 16 வரையும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய துறைகளில் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் 23 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் வழியாக, பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள 27 துறைகளில் முதுநிலை பட்டம், 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு, முதுநிலைப் பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளாக மொத்தம் 46 படிப்புகளுக்கும், தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மையத்தில் 8 துறைகளில் 8 முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் இணையதளத்தில் உள்ளன.

The post மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: