பெரம்பூர்: சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குடிபோதையில் இரண்டு பேர் தகராறில் ஈடுபடுவதாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் முல்லை நகர் சுடுகாடு அருகே இரண்டு பேரை போலீசார் மடக்கி படித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த அசோக்குமார்(41), மணி(எ) மணிகண்டன்(29) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புளியந்தோப்பு காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் அன்சாரி தெருவைச் சேர்ந்த லோகநாதன்(40) என்பதும், இவர் பிரபல கஞ்சா வியாபாரியான மியா(எ) ஆனந்த வள்ளியின் கணவர் என்பது தெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின்பேரில் கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனியைச் சேர்ந்த கார்த்திக்(எ) பிள்ளை கார்த்திக்(32), மணிகண்டன்(எ) பாட்ஷா(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் சேர்ந்து புளியந்தோப்பு பி.கே. காலனியைச் சேர்ந்த சுரேஷ்(42) என்பவரை அடித்து பணம் பறித்தததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post புளியந்தோப்பு, எம்கேபி நகர் பகுதிகளில் 5 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.