திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரி (20). கல்லூரி மாணவி. இவரது தங்கை அபிநயா (15). 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது சித்தி மகன்களான கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (13), அவரது தம்பி கிரண் (8) ஆகிய இருவரும் கோடை விடுமுறையை கழிக்க அரசூரில் வசித்து வரும் தனது பெரியம்மா சித்ரா வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று காலை சிவசங்கரி, அபிநயா, ராஜேஷ் மற்றும் கிரன் ஆகியோர் மலட்டாற்று பகுதியில் குளிக்க சென்றுள்ளனர். கிரண் மட்டும் கரையிலிருந்து கொண்டு மற்ற மூவரும் ஆற்றில் செல்லும் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
The post ஆற்றில் மூழ்கி சகோதரிகள், சகோதரன் சாவு: முதல்வர் இரங்கல் நிதியுதவி appeared first on Dinakaran.