அகமதாபாத் விமானம் சென்னை திரும்பியது: 4 விமானங்கள் ரத்து

சென்னை: அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து எதிரொலியாக அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து அகமதாபாத் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது. சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் மாலை 3.45 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது. இதனிடையே அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால், அகமதாபாத் விமான நிலையம் மூடப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்ட அகமதாபாத் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தை நெருங்கியது. அப்போது, அகமதாபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசிய அதிகாரிகள், விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அகமதாபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. அகமதாபாத் விமான நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை – அகமதாபாத், அகமதாபாத் – சென்னை இடையே 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post அகமதாபாத் விமானம் சென்னை திரும்பியது: 4 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: