சேலம்,மே 22: சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த சூரப்பள்ளியைச் சேர்ந்த செல்வம் நேற்று தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலத்திற்கு மனு அளிக்க வந்தார். அதில், ‘எனது மகன் குருமூர்த்தி கடந்த 2021ம் ஆண்டு அரசுப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றான். சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்து வந்தான். இதனிடையே, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த பயிற்சி மையத்தினர், அதில் குளறுபடி செய்தனர். குறிப்பாக மகனின் கையெழுத்தை அவர்களே போட்டுக் கொண்டு விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ததால், தேர்வின் போது பல்வேறு சிக்கல்களை சந்தித்தான். இதனால், கடந்த 4 ஆண்டுகளாக கடுமையாக படித்தும், சரிவர நீட் தேர்வு எழுத முடியாமல் போனது. எனவே, சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தார்.
The post தனியார் பயிற்சி மையம் மீது புகார் appeared first on Dinakaran.