தூய்மை பணியாளரை தாக்கிய அசாம் வாலிபர்

ஓசூர், மே 21: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனம்மா(42). இவர், ஓசூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 18ம் தேதி ஓசூர் பஸ் ஸ்டாண்டில் தூய்மை பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, போதையில் வந்த நபர் ஒருவர், சீனம்மா சுத்தம் செய்து வைத்திருந்த இடத்தில் வாந்தி எடுத்தார். அதனை கண்டித்த சீனம்மாவிடம் தகராறு செய்த அந்த நபர், திடீரென தாக்கினார். இதில், காயமடைந்த சீனம்மா, ஓசூர் டவுன் போலீசில் புகாரளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், குடிபோதையில் சீனம்மாவை தாக்கியது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா திலகா(27) என்பதும், ஓசூர் தளி சாலை, ஜெய்சக்தி நகரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post தூய்மை பணியாளரை தாக்கிய அசாம் வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: