கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர், ஜூன் 13: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, மழை பொழிவு குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்தது. இதனால் 281 கன அடியாக நீர்வரத்து இருந்தது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 657 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 541 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர்மட்டம் 40.67 அடியாக உள்ளது.

The post கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: