ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாம்

ஊத்தங்கரை, ஜூன் 11: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 129 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டத்தில், நான்காவது கல்வி ஆண்டுக்கான முதற்கட்ட பயிற்சி 125 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி நடந்தது. மேற்பார்வையாளர் ஆசிரியர் வசந்தி, விரிவுரையாளர் நிஷா ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வழுவட்டும் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் அனைத்து ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: