அதிமுக நிர்வாகி மாயம் போலீசில் மகன் புகார்

ஊத்தங்கரை, ஜூன் 13: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியை சேர்ந்தவர் சேகர் (68). இவர் அதிமுகவில் மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். கடந்த 9ம் தேதி, தனது மகன் சக்திபாலாஜியிடம், கட்சி வேலையாக செல்வதாக கூறி விட்டு, சேகர் வெளியே சென்றார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும், அவரது செல்போனிலும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதுபற்றி அவரது மகன் சக்திபாலாஜி, சாமல்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிமுக நிர்வாகி மாயம் போலீசில் மகன் புகார் appeared first on Dinakaran.

Related Stories: