இடி மின்னல், சூறைக் காற்றுடன் மழை சென்னையில் 16 விமானங்கள் தாமதமாக இயக்கம்

சென்னை, மே 21: இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து 16 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது, மழை தூறியது. இந்நிலையில், மாலை 3 மணியளவில் திடீரென கருமேகக் கூட்டம் திரண்டது. அதோடு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் தரையிறங்க வந்த அந்தமான்-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், புவனேஸ்வர்-சென்னை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கோவா-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், மும்பை-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், திருச்சி-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், டெல்லி-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், கோவை-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், சிங்கப்பூர்-சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ், இலங்கை-சென்னை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மதுரை-சென்னை ஏர் இந்தியா விமானம் ஆகிய 10 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தன. காற்றும், மழையும் சிறிது சிறிதாக ஓய்ந்த நிலையில், வானில் வட்டமடித்த 10 விமானங்களும், ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கின. அதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, மும்பை, சேலம், சீரடி, ஹைதராபாத், இலங்கை ஆகிய 6 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

The post இடி மின்னல், சூறைக் காற்றுடன் மழை சென்னையில் 16 விமானங்கள் தாமதமாக இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: