உயர்கல்வித் துறை சார்பில் கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்து புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம் உள்ளிட்ட உயர்கல்வித் துறை சார்பில் ரூ.120.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.207.82 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில “தமிழ்ப்புதல்வன்” திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, இராணி மேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம்

இராணி மேரி கல்லூரியில் 22.11.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இராணி மேரி கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக விடுதி ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை உடனே ஏற்றுக் கொண்டு விழா மேடையிலேயே விடுதி கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, சென்னை, இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் 455 மாணவியர் தங்கிப் படிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், அங்கு பயிலும் மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

இவ்விடுதியின் தரைத்தளத்தில் பத்து அறைகள், கருத்தரங்க அறை, மின்தூக்கிகள், சிசிடிவி கேமராக்கள், நவீன சமையல் அறை, உணவு அருந்தும் கூடம், தேவையான மருத்துவச் சேவையினை மாணவியர் பெற மருத்துவர் அறை என அனைத்து நவீன வசதிகளுடன் இவ்விடுதி கட்டப்பட்டுள்ளது.

* திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 18 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள் மற்றும் 3 கழிவறைத் தொகுதிக் கட்டடங்கள்;

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 1 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஒரு கழிவறைத் தொகுதி கட்டடம்

கிருஷ்ணகிரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 6 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 கூடுதல் வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள், 2 பணிமனைகள் மற்றும் 2 கழிவறைக் கட்டடங்கள்;

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி, அரசு பொறியியல் கல்லூரியில் 1 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1 புதிய ஆய்வகம், ஒரு பணிமனை மற்றும் 2 கழிவறைத் தொகுதிக் கட்டடங்கள்;

கடலூர் மாவட்டம், கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் ஆய்வகக் கட்டடம் மற்றும் கழிவறைத் தொகுதிக் கட்டடம்;

தூத்துக்குடி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 2 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஒரு ஆய்வகக் கட்டடம்;

சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் 28 கோடியே 5 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம்;

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஆய்வகக் கட்டடங்கள்; பெரம்பலூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்;

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 24 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; சிவகங்கை அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் 1 கோடியே 98 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 ஆய்வகங்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறைக் கட்டடம்;

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 25 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்;

தென்காசி மாவட்டம், சுரண்டை, காமராஜர் அரசு கலை கல்லூரியில் 3 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் என மொத்தம் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட உயர்கல்வித் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

* அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்

சென்னை, மைய தெழில்நுட்ப வளாகத்தில், மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மாணவர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம்

ஈரோடு, அரசு பொறியியல் கல்லூரியில் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மாணவர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம்; கோயம்புத்தூர், அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 21 கோடி செலவில் கட்டப்படவுள்ள மாணவர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம்; கோயம்புத்தூர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 கோடியே 33 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கல்வித் தொகுதி கட்டடங்கள்;

சென்னை, குரோம்பேட்டை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 31 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்; சென்னை, தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 11 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கல்விசார் கட்டட தொகுதி; சேலம், அரசு பொறியியல் கல்லூரியில் 1 கோடியே 95 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 கழிவறைத் தொகுதிகள்;

ஈரோடு, அரசு பொறியியல் கல்லூரியில் 4 கோடியே 12 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 2 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள் மற்றும் 4 கழிவறைத் தொகுதிகள்; கோயம்புத்தூர், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 9 கோடியே 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள முதலாமாண்டு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைக்கான கட்டடங்கள்;

மதுரை, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 கோடியே 54 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 4 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் உயர்திறன்மைய தொழில்நுட்ப ஆய்வக கட்டிடம் மற்றும் பிளாஸ்டிக் உருவாக்குவதற்கான ஆய்வகக் கட்டடம்;

மதுரை, செக்கானூரணி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 3 ஆய்வகக் கட்டடங்கள்; வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 கோடியே 33 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்;

கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 கோடியே 33 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 3 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்; கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் 1 கோடியே 67 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 2 ஆய்வக கட்டடங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்;

சென்னை, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் 2 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; செங்கல்பட்டு, இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் கழிவறைத் தொகுதிகள்;

சென்னை, இராணி மேரி கல்லூரியில் 2 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; கோயம்புத்தூர், அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 10 வகுப்பறைக் கட்டடங்கள்;

கோயம்புத்தூர், தொண்டமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆழ்துளை கிணறு; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 10 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்;

நீலகிரி, கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 12 வகுப்பறைக் கட்டங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்; நாமக்கல், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 10 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்;

சேலம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள ஒரு ஆய்வகக் கட்டடம் மற்றும் ஒரு ஆழ்துளை கிணறு; திண்டுக்கல், கொடைக்கானல் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 8 வகுப்பறைக் கட்டடங்கள்;

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைக் கட்டடங்கள்; அரியலூர், அரசு கலைக் கல்லூரியில் 8 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 20 வகுப்பறைகள், 2 கழிவறைத் தொகுதிகள் மற்றும் 2 ஆழ்துளை கிணறுகள்;

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 2 ஆய்வகங்கள்; திருவாரூர், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைக் கட்டடங்கள்;

திருவாரூர், திருத்துறைபூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 2 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; கடலூர், விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறை தொகுதிகள்;

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள்; நாகர்கோவில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைகள்;

வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 28 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 10 கூடுதல் வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்;

விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைகள்; விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள் மற்றும் 2 கழிவறைத் தொகுதிகள்;

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 6 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆழ்துளை கிணறு; தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள 4 ஆய்வகங்கள், 3 கழிவறை தொகுதிகள் மற்றும் ஒரு ஆழ்துளை கிணறு;

என மொத்தம் 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள உயர்கல்வித்துறை புதிய கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

 

The post உயர்கல்வித் துறை சார்பில் கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்து புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: