அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை : அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், “முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்! 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது.அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்!” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: