அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், நாம் எப்போதோ தேர்தல் பணிகளை துவங்கிவிட்டோம். எங்களிடையே சிறந்த முறையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதில்தான் போட்டி நிலவுகிறது. நமது முதல்வர் 2வது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கு அதிகப்படியான வாக்குகளை யார் பெற்றுத் தரப்போகிறார்கள் என்பதில்தான் எங்களுக்குள் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பணிக்கு வந்து செல்லக்கூடியது திமுக இயக்கம் அல்ல. அது, எப்போதும் மக்களுக்காக முன்நிற்கக்கூடிய இயக்கம் என்பதில் எவ்வித மறுப்பும் இல்லை. திமுகவை பொறுத்தவரை போட்டி போட்டு கட்சியை வளர்ப்பதற்கும் மக்களுக்கு முதலில் செய்திகளை கொண்டு சேர்ப்பதில்தான் எங்களுக்குள் போட்டி இருக்கும்’ என்றார். கூட்டத்தில் மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன், தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சட்டமன்ற தேர்தலில் முதல்வருக்கு வெற்றியை அன்பளிப்பாக வழங்க சூளுரைப்போம்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.