திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மௌனா ஷெரின் (11) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.