இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகே மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘வரலாற்று சிறப்புமிக்க மதுரை ஆதீன பொறுப்பிலிருந்து ஞானசம்பந்த தேசிகரை நீக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்து மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிடுவதற்காக கிளம்பியபோது அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக 50 பேரை கைது செய்தனர்.
The post மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட முயற்சி: மதுரையில் பரபரப்பு appeared first on Dinakaran.