இந்த நிலையில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) அமைப்பிற்காக உளவு பார்த்ததாக கூறப்படும் ஒருவரை உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்பு குழுவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஷாஜத் என்பவர் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் என்றும் மொராதாபாத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷாஜத் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் பலமுறை பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக பயணம் மேற்கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
The post பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் கசிவு? : ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த 8 பேரை கைது செய்தது இந்திய அரசு!! appeared first on Dinakaran.