ரயிலில் கடத்திய 3 கிலோ கஞ்சா பறிமுதல்

 

ஈரோடு,ஜூன்14: தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ஈரோட்டை கடந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.  அந்த ரயிலில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பொது பெட்டி ஒன்றில் கேட்பாரற்று ஒரு பையை கைப்பற்றி சோதனையிட்டனர்.

அப்போது அதில், அரசால் தடைசெய்யப்பட்ட போதைபொருளான கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிலிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்ற விவரம் தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஈரோடு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post ரயிலில் கடத்திய 3 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: