பசுந்தீவனம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் நோக்கில், பசுந்தீவன உற்பத்தியை அதிகரித்திட செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கிராமப்புற நிலமற்ற விவசாயிகளின் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் ஆண்டு முழுவதும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கால்நடை பண்ணைகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை மருத்துவ சேவைகள் கிடைக்காத தொலைதூர கிராமப்புற பகுதிகளில் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கும் பொருட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அனைத்து ஊர்திகளும் ஆண்டு முழுவதும் சேவைகள் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் துறை செயலாளர் சுப்பையன், இயக்குநர் கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கால்நடைகளை நோய்களில் இருந்து காத்திட அனைத்து தடுப்பூசி பணிகளையும் தங்கு தடையின்றி செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு appeared first on Dinakaran.