பள்ளி மாணவர்களுக்கு கோடை கால யோகா பயிற்சி

 

கூடலூர்: கூடலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை வளாகத்தில் கடந்த 29-ம் தேதி துவங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு 10 நாள் கோடைகால சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சியில் உடற்பயிற்சி, யோகா, காயகல்பம், நினைவாற்றல் பயிற்சி, தியானம் மற்றும் பிராணயாமா மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவை கற்பிக்கப்பட்டது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். பொருளாளர் சண்முகவேல், பேராசிரியர்கள் சுமிதா சந்திரகலா, பிரம்ம ஞானிகள் ராஜ்யநீ, கீதா ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலகவேணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சான்றிதழ் வழங்கினார்.

The post பள்ளி மாணவர்களுக்கு கோடை கால யோகா பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: