வீட்டில் வைத்திருந்த விவசாய பொருட்கள் திருட்டு

 

ரெட்டிச்சாவடி: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி மணவெளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(55), விவசாய வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனது பழைய வீட்டில் விவசாயத்திற்கு தேவையான பழைய பித்தளை, செம்பு பொருட்கள் காப்பர் ஒயர், இரும்பு பொருட்கள் போன்றவற்றை வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து பின்பக்க கதவை திறந்து பித்தளை பொருட்களை திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post வீட்டில் வைத்திருந்த விவசாய பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: