துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு வவ்வால் கிலோ ரூ.1000க்கு விற்பனை

 

கடலூர்: கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது. தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக விசை படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பைபர் மற்றும் நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். அவர்களும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையே சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து மிகவும் குறைவாக காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமைகளில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் மீன் விற்பனை தளத்தில் நேற்று பொதுமக்கள் கூட்டமும் குறைவாக காணப்பட்டது. இருப்பினும் சில வியாபாரிகள் மட்டும் நாட்டு படகு மீன்களை விற்பனை செய்தனர். வவ்வால் மீன் ஒரு கிலோ ரூ.1000க்கும், கிளி மீன் கிலோ ரூ.250க்கும், பாறை மீன் ஒரு கிலோ ரூ.350க்கும், மடவை மீன் ரூ.400க்கும், கனவாய் மீன் ஒரு கிலோ ரூ.200க்கும், இறால் ஒரு கிலோ ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு வவ்வால் கிலோ ரூ.1000க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: