நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு

நெல்லிக்குப்பம், மே 22: நெல்லிக்குப்பம் மோரை வைத்தியர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் திருவழகன்(43). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் டிங்கர் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 5 வருடங்களுக்கு முன் திருவழகனின் தாய் இறந்த நிலையில், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்த பின்னர் இரவு நேரத்தில் சோழவல்லி பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று அங்கு தூங்கிவிட்டு காலையில் வீட்டுக்கு வந்து வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் வாசலில் உள்ள கிரில் கேட் உடைக்கப்பட்டும், முன்பக்க மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு மூடிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தது. அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 1 ஜோடி 3 பவுன் கொண்ட தங்க வளையல், 3 பவுன் தங்க செயின் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து திருவழகன், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: