கடலூர் முதுநகர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபர்கள் கைது

கடலூர், மே 22: கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார், கண்ணாரப்பேட்டை மணல் குவாரி அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 4 வாலிபர்கள் தப்பி செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, சேடப்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஆகாஷ் (23), அன்னவெளியை சேர்ந்த கவியரசன் (23), சின்ன பிள்ளையார்மேட்டையை சேர்ந்த ஐயப்பன் (24), கரைமேடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் சரத்குமார் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கடலூர் முதுநகர் அருகே கஞ்சா விற்பனை செய்த 4 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: