திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஆலோசனை

 

திருப்பூர், மே 7: சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில், திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை, “நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு” என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, திருப்பூர் மத்திய மாவட்டம் முழுவதும் தொடர் சாதனை விளக்க பொது கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக, மாவட்ட செயற்குழு கூட்டம், திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் நடந்தது.

இதற்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன், மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர கழக செயலாளர் கலந்து கொண்டனர். இதில், தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 3 இடங்களில், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 9 இடங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

 

The post திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: