முதியவரை தாக்கி பைக் பறிப்பு

 

திருப்பூர், மே 7: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள செல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (60). இவர், ஊத்துக்குளியில் இருந்து விஜயமங்கலம் செல்லும் சாலையில் கரைப்பாளையம் பிரிவு அருகே செயல்படும் ஆயில் மில் முன் பைக்கை நிறுத்தி போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் தங்கவேலுவை தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரது பைக் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தங்கவேல் அளித்த புகாரின்பேரில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பைக் பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

The post முதியவரை தாக்கி பைக் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: