செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு 25,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு

சென்னை: இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 25,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே-ம் தேதி வணிகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக வணிகர் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் கடைகளை அடைத்து வணிகர் தினத்தை கொண்டாடுகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கப்பட்டு மாவட்டமான செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், மகாபலிபுரம், அச்சரப்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் 25,000-க்கும் அதிகமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு நகரை பொறுத்தவரையில் அண்ணாசாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்தி நிலையம் என பல்வேறு இடங்களில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறாக பொது மக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்படுகிறது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு 25,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: