மும்மொழி கொள்கை விவகாரத்தில் ஒன்றிய அரசின் அடாவடிப் போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் முதல்வரை பாராட்டுகிறது. தமிழர்களுக்கு என்று தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒரு நாகரிகமும், வரலாறும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜ அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம், இந்தித் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டங்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ள கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்குப் பாராட்டுகளையும், முழு ஒத்துழைப்பை நல்கிய மாவட்ட-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் செயலாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது உட்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post தமிழ்நாட்டின் வரலாற்றை மறைக்க துடிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம்: திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.