புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்து இருக்கலாம். மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை இந்த கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாம்.நீலகிரி மாவட்டத்திற்கும் கோவை மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறார்கள், கனமழை பெய்யும் என தெரிவித்து இருக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதும், தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதி, திட்டங்களில் ஒன்றிய அரசின் பாரபட்சம் குறித்து அறிக்கை, பேட்டி அளித்து எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இப்போது மீண்டும் பாஜவுடன் கூட்டணி அமைத்தபிறகு, ஒன்றிய அரசுக்கு ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்துள்ளனர்.
The post ஒன்றிய அரசு நிதி தர மறுப்பு எடப்பாடி திடீர் வக்காலத்து appeared first on Dinakaran.