கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்று அல்ல, இட்டு கட்டி எழுதப்பட்ட ஒன்று அல்ல, வரலாற்று தரவுகளுக்கு முரணானவை அல்ல, அதில் என்ன ஐயம் இருக்கிறது, அதில் முரணான தகவல் இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அவ்வாறு இன்றி அதனை திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள். அல்லது காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. தற்காலிகமாக ஒரு தேக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் வரலாறு என்றைக்கும் வரலாறுதான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன தமிழர் தொன்மையும், தமிழர் நாகரிகமும் இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. ஆகவே புதையுண்டது புதையுண்டதாகவே இருந்துவிடாது.
அது மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் என்பதற்கான சான்றுதான் கீழடி. ஒரு மொழி, ஒரு நாடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல. சாதியை ஒழிப்பதற்கு சாதிய முரணை ஒழிப்பதற்கு ஆளுநர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்? வெறுமனே திமுக மீது குற்றச்சாட்டு வைப்பதற்காக பேசுகிறாரா என்பது குறித்து விளக்கம் தேவை, அப்படி அதிக அளவிலான சாதிகள் முரண் இருக்குமானால் அதை ஒழிக்க ஒன்றிய அரசும், அதை சார்ந்திருக்கின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்ன செய்யப் போகிறது என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post வேண்டுமென்றே எடப்பாடி விமர்சனம் பாஜவோடு திமுக நெருங்காது : திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.