திருப்பூர், மே 5: பல்லடத்தில் சொத்து தகராறில் தம்பி குடும்பத்தை அண்ணன் குடும்பம் அரிவாள் கட்டைகளோடு தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளம்பாளையம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் (45). அவருடைய தம்பி நாராயணசாமி (39). சொத்து தொடர்பாக பேசியபோது இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவியை நாராயணன் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அரிவாள் கட்டைகள் கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜேந்திரன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாராயணனும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post சொத்து தகராறில் கட்டைகள், அரிவாள் கொண்டு தாக்குதல் appeared first on Dinakaran.