காங்கயம், ஏப்.29:காங்கயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில், காங்கயத்தை சேர்ந்த விவசாயிகள் 1160 கிலோ எடையுள்ள 23 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதனை காங்கயம் சுற்று வட்டார பகுதியான காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
இதில், குறைந்தபட்ச விலையாக ரூ.160க்கும், அதிகபட்ச விலையாக ரூ.179க்கும் பருப்புகள் ஏலம் எடுக்கப்பட்டது. 1160 கிலோ எடை உள்ள தேங்காய் பருப்பு மூட்டைகள் மொத்தமாக ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 172 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
The post தேங்காய் பருப்புகள் ரூ.1.92 லட்சத்துக்கு ஏலம் appeared first on Dinakaran.