அமைச்சர் பதவியில் இருப்பவர்களின் சமூக பிரதிநிதித்துவம் வாக்கு அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது கிறித்துவ நாடாரான மனோ தங்கராஜுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சரவையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கும் நிலையில் தற்போது மனோ தங்கராஜ் உடன் சேர்த்து 4 பேர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதேபோல யாதவர் சமூகத்தைச் சார்ந்த ராஜகண்ணப்பனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த முத்துசாமிக்கும், வன்னியர் சமூகத்தைச் சார்ந்த சிவசங்கருக்கும் கூடுதல் இலாகா வழங்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் appeared first on Dinakaran.