ஈரோடு, ஏப். 23: ஈரோடு, அக்ரஹாரத்தை அடுத்துள்ள கனிராவுத்தர் குளம் பிரிவு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள போதை பொருளான கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற இருவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஹக்கிம் (28), பாசில் (எ) பப்பாளி (27), என்பதும், இருவரும், அரசால் தடைசெய்யப்பட்டுள்ள போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 1.100 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல, ஈரோடு வடக்கு போலீசார், கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈ.பி.பி. நகரை சேர்ந்த செந்தில்குமார் (48), என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 1.100 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
The post கஞ்சா விற்பனை; 3 பேர் கைது appeared first on Dinakaran.