5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் போக்சோவில் கைது

குடியாத்தம், ஏப்.12: குடியாத்தம் அருகே 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி(63). இவர் அந்த சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முதியவர் சுப்பிரமணியை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: