பொன்னை, ஏப்.12: பொன்னை அருகே மனைவி குடும்பம் நடத்த வரமறுத்த வேதனையில் மாமியார் வீட்டில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(49). இவரது மனவைி தேவி(39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுரேஷ்பாபு ஹோட்டலில் சர்வராக வேலை செய்து வந்தார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். அதேபோல் கடந்த வாரம் நடந்த தகராறில் மனைவி தேவி கோபித்து கொண்டு வேலூர் மாவட்டம், பொன்னையில் உள்ள தாய் வீட்டிற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுரேஷ்பாபு தனது மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து நேற்று காலை வீட்டிற்கு வரும்படி மனைவி தேவியை அழைத்தாராம்.
ஆனால், அதை பொருட்படுத்தாமல் தேவி, மாமியார் கலைச்செல்வி ஆகிய இருவரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த சுரேஷ்பாபு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வீட்டிற்கு வந்த இருவரும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி குடும்பம் நடத்த வராத வேதனையில் மாமியார் வீட்டில் மருமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post மனைவி குடும்பம் நடத்த வராததால் மாமியார் வீட்டில் தூக்குப்போட்டு மருமகன் தற்கொலை appeared first on Dinakaran.