‘ஹேர் டை’ குடித்து மனைவி தற்கொலை அதிர்ச்சியில் தூக்கிட்டு கணவரும் சாவு

நெல்லை: நெல்லை, ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரம் இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் கீதா (23)விற்கும், திருச்சி கொட்டாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்த நந்தகுமாருக்கும் (30) 4ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. நந்தகுமார் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கீதா அவரை பிரிந்து கடந்த 3 ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசித்துள்ளார். நேற்று முன்தினம் நந்தகுமார் வந்தபோது கீதாவுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த கீதா, ஹேர் டையை குடித்து, மருத்துவமனையில் இறந்தார். இதனால் நந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post ‘ஹேர் டை’ குடித்து மனைவி தற்கொலை அதிர்ச்சியில் தூக்கிட்டு கணவரும் சாவு appeared first on Dinakaran.

Related Stories: