இந்நிலையில், கடந்த வாரம் புதன் கிழமை வாராந்திர பரிசோதனைக்காக பூந்தோட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்ததிற்கு சென்று மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்ற பிறகு சத்து மாத்திரை வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற ஜெயந்தி, மாத்திரையில் ஸ்டேபிளர் பின் இருப்பதை அறிந்துள்ளார். இதையடுத்து பூந்தோட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்ததில் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இன்று இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதார அலுவலர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
The post மாத்திரையில் ஸ்டேபிளர் பின் இருந்த விவகாரம்: திருவாரூர் மாவட்ட சுகாதார அலுவலர் அறிக்கை தர ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.