மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1,200 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,000 கனஅடியாக சரிந்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 922 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 436 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 107.79 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 107.73 அடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 75.22 டிஎம்சியாக உள்ளது.
The post மேட்டூர் அணை நீர்மட்டம் 107.7 அடியானது appeared first on Dinakaran.