வேறு சமூக பெண்ணை காதலித்த வாலிபர் கொன்று புதைப்பு: நெல்லை டவுனில் பயங்கரம்

நெல்லை: நெல்லை டவுனில் கொலை செய்யப்பட்ட வாலிபர் புதைக்கப்பட்ட நிலையில், போலீசார் இன்று அதிகாலையில் அவரது உடலை மீட்டனர். இக்கொலையில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் செபஸ்தியார் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் மகன் ஆறுமுகம்(எ) அல்லு. இவர் நேற்று இரவு 7 மணியளவில் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அவரது உடலை எடுத்துச்சென்று அருகில் உள்ள வயல்காட்டு பகுதியில் புதைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். கொலை நடந்த குருநாதன் கோயில் சாலை, கண்டியப்பேரி விலக்கு பகுதியில் ரத்தக் கறை திட்டு, திட்டாக காட்சியளித்தது. இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் ரத்தக்கறை குறித்து பரபரப்பாக பேசியதோடு, டவுன் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் கொலை சம்பவம் குறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கினர். டவுன் குருநாதன் கோயில் பகுதி, டவுன் நயினார்குளம் சாலை, ராமையன்பட்டி சாலை, தேனீர்குளம் சாலை, பாறையடிபகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் பல்வேறு பகுதிகளில் தேடினர். கொலை சம்பவம் புரளி என்றும், உண்மை என்றும் இருவேறு தகவல்களால் போலீசார் குழப்பம் அடைந்தனர். மதுபோதையே பிரச்னைக்கு காரணம் என அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூற, உஷாரான போலீசார் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மது அருந்திய 3 இளைஞர்களுக்குள் போதையில் தகராறு நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, ரத்தக்கறை படிந்த இடத்தில் இருந்து கொலையுண்ட வாலிபரை கண்டுபிடிக்க முயன்றனர்.

ஒருவழியாக இன்று அதிகாலையில் மோப்பநாய் உதவியுடன் வாலிபர் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டது. போலீசார் பின்னர் தோண்டி பார்த்ததில் கொலையுண்டவர் டவுனை சேர்ந்த ஆறுமுகம்(எ) அல்லு என்பது தெரிய வந்தது. பின்னர் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்த போலீசார், குடும்பத்தினரை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் ெகாலை செய்யப்பட்ட ஆறுமுகம், மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அதற்கு பெண்ணின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவில் பிரச்னையை பேசி முடிப்போம் என ஆறுமுகத்தை கொலையாளிகள் தரப்பு மது பாருக்கு வரவழைத்துள்ளது.

அங்கு காதல் விஷயத்தில் ஆறுமுகம் உறுதியாக நின்ற நிலையில், கொலையாளிகள் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அருகில் உள்ள வயல்வெளியில் புதைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டவுன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் மூன்று பேரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த ஒருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு முழுவதும் டவுனில் பரபரப்பு ஏற்பட்டது. ெகாலை செய்யப்பட்ட ஆறுமுகம், மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அதற்கு பெண்ணின் சகோதரர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது.

The post வேறு சமூக பெண்ணை காதலித்த வாலிபர் கொன்று புதைப்பு: நெல்லை டவுனில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: