தஞ்சாவூர் அருகே குளத்தில் குளித்தபோது 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: வாலிபர், 4 சிறுவர்கள் போக்சோவில் கைது

வல்லம்: தஞ்சாவூர் அருகே சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் நண்பர்களான 13 மற்றும் 12 வயதுடைய 2 சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ராகுல் (19) மற்றும் அவரது நண்பர்களான 17, 15, 14, 15, வயதுடைய சிறுவர்கள் என மொத்தம் 5 பேரும், அந்த 2 சிறுவர்களையும் மிரட்டியும், தாக்கியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெளியில் சொன்னால் தொலைத்து விடுவோம் எனவும் மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வாக இருந்த சிறுவர்களிடம், பெற்றோர் விசாரித்துள்ளனர்.

அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ராகுல் மற்றும் நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 4 பேரும் சிறுவர்கள் என்பதால் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

The post தஞ்சாவூர் அருகே குளத்தில் குளித்தபோது 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: வாலிபர், 4 சிறுவர்கள் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: