கிருஷ்ணகிரி, ஏப்.3: கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து உள்ளது. கடந்த ஒரு வாரமாக, கிருஷ்ணகிரி அணைக்கு விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 81 கனஅடியாக சரிந்தது. அணையில் பாசனத்திற்காக வலது, இடதுபுற கால்வாய்கள் மற்றும் ஊற்றுக்கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 171 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் நீர்மட்டம் 48.15 அடியாக உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, அணையில் இருந்து 22 கனஅடி தண்ணீர் ஆவியாகி வருவதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால், அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறை வாய்ப்புள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
The post கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 81 கனஅடி appeared first on Dinakaran.