கோபி,மார்ச் 28: கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 36 கல்லூரிகளை சேர்ந்த 244 மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரிடமிருந்து பரிசுகள் பெற உள்ளனர்.
நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், மாநில சிறுபான்மை ஆணைய ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கோபி தாசில்தார் சரவணன் ஆகியோர் பேசினர். மாவட்ட மாணவரணி அமைப்பாளரும் போட்டி ஒருங்கிணைப்பாளருமான கிருபாகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு, தெற்கு, மத்திய, மாநகர சிறுபான்மையினர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஈரோடு-வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கோபியில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.