ஈரோடு, மார்ச் 28: பவானியில் தொடர் குற்ற வழக்கில் கைதான வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் மேற்கு வீதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் டேவிட் (எ) சொக்கலிங்கம் (31). இவரை கடந்த சில வாரங்களுக்கு முன் திருட்டு வழக்கில் பவானி போலீசார் கைது செய்து, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். சொக்கலிங்கம் மீது திருட்டு உள்ளிட்ட 18 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.
தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் சொக்கலிங்கதின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு எஸ்பி ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன் ேபரில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, சொக்கலிங்கத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சொக்கலிங்கத்தை, பவானி போலீசார் பாதுகாப்புடன் கோவையில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
The post பவானியில் குற்ற வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.