சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் கார் கதவை உடைத்து டிரைவர் மதியழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேரும் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு காரில் பாதுகாப்பு பலூன் இருந்து வெளியில் வந்த நிலையிலும் ஓட்டுநர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். விபத்து காரணமாக இந்த பாலத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.
The post பாலத்தின் மீது பஞ்சராகி நின்ற லாரி மீது கார் மோதி விபத்து டிரைவர் பலி, 6 பேர் காயம்: கோயிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம் appeared first on Dinakaran.