புல்லட் ரயில் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ஏன் மறுக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், “தீபகற்ப நதிகளான மகாநதியில் இருந்து கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு உள்ளிட்ட நதிகளை இணைப்பதற்கான திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். ஆனால் இதுவரை நதி நீர் இணைப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. உத்தரபிரதேசம்-மத்தியபிரதேசம் இடையே இந்த திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை செயல்படுத்துவதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார். ஆனால் மற்ற இடங்களில் இந்த திட்டத்தின் நிலை என்ன?,”இவ்வாறு தெரிவித்தார்.
The post புல்லட் ரயில் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ஏன் மறுக்கிறது : திமுக எம்.பி.டி.ஆர்.பாலு appeared first on Dinakaran.