அந்த ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவும் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரை கொலை செய்யும் நோக்கத்தோடும் தூத்துக்குடி ரவுடி கும்பல் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு! appeared first on Dinakaran.