இந்த நிலையில், ஐபிஎல்-ல் உள்ள Impact player விதியை நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள 10 அணி கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று ஆலோசனை நடத்தியது. பந்தின் மீது எச்சில் தேய்க்க விதிக்கப்பட்ட தடையை நீக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ஐபிஎல்-ல் உள்ள Impact player விதியை நீக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-ல் அறிமுகப்படுத்த இந்த விதியால் பல ஆட்டங்களின் போக்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
The post ஐபிஎல்-ல் உள்ள Impact player விதியை நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்! appeared first on Dinakaran.