திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கலெக்டர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 447 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், தனித்துணை கலெக்டர் (சபாதி) பாலமுருகன், உதவி ஆணையர் கலால் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம், தீபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறை தீர் கூட்டத்தில் 447 மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.